ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கேரளத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று

​கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 65 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2020, 2:36 pm

DIN


கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 65 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, கேரளத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,238 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 907 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

திருச்சூரில் 87 வயது முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டதில், இன்று முடிவுகள் வெளியானது. அதில், அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 65 பேரில் 34 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 25 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.