புது தில்லி: சென்னையில் உள்ள அரசு காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் 35 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் 35 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், அரசுக் காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், கிருஷ்ண முராரி, எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு எவ்வாறு தொற்று பரவியது என்றும், இது பற்றி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசு சரியாகப் பின்பற்றவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பக வார்டனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


