புத்தடியில் இன்று ஏலக்காய் வர்த்தகம் ரத்து
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறும்.
போடியில், சி.பி.எம்.சி., ஏல நிறுவனம் மூலம் புதன்கிழமை நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில், மொத்தம் 52.91 டன் ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில், சராசரி தரம் கிலோ ரூ.1,658.31-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,377க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று(வியாழக்கிழமை), புத்தடியில் சி.பி.ஏ., ஏல நிறுவனம் சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் வர்த்தகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக வர்த்தகம் ரத்து செய்யப்படுவதாக சி.பி.ஏ., ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...