கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:46 pm

ANI

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் மற்றும் கத்துவா மாவட்டங்களில் உள்ள மஞ்சகோட், கெரி, பாலகோட் மற்றும் கரோல் மைத்ரான் ஆகிய பகுதிகளில் சிறிய மற்றும் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

புதன்கிழமை இரவு 10 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்குள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. பதுங்கு குழியில் கிராம மக்கள் பதுங்கும் நிலை ஏற்பட்டது. 

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. சிறிது நேரம் நடைபெற்ற இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.