புணே: தொலைக்காட்சி முன் பல மணி நேரம் அமர்ந்து கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு பெற்றோர் கண்டிப்பு தெரிவித்ததால் 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
புணே மாவட்டம் பிப்வேவாடி பகுதியில், வசித்து வந்த பள்ளிச் சிறுவன் நாள் முழுக்க கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். கடந்த புதன்கிழமை சிறுவனின் தாய் இதனைக் கண்டித்துள்ளார். சிறுவனின் சகோதரி தொலைக்காட்சியை அணைத்துவிட்டுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த சிறுவன், மாடியில் உள்ள அறைக்குச் சென்று மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
பல மணி நேரம் ஆகியும் சிறுவன் உணவருந்த கீழே வராததால், சகோதரி மாடிக்குச் சென்று பார்த்த போதுதான் சம்பவம் பற்றி குடும்பத்தாருக்குத் தெரிய வந்தது.
உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


