மகாராஷ்டிரத்தில் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது! இன்று மட்டும் 3,493 பேருக்கு தொற்று உறுதி

மகாராஷ்டிரத்தில் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது! இன்று மட்டும் 3,493 பேருக்கு தொற்று உறுதி

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
Published on

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

நாட்டில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று 3,493 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 127 பேர் உள்பட மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,717 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேர் உள்பட 47,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com