நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கரோனா எதிரொலி: தில்லி ஆளுநர், முதல்வருடன் நாளை அமித் ஷா ஆலோசனை

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

News image
Updated On :13 ஜூன் 2020, 11:59 am

PTI

புது தில்லி: தலைநகர் தில்லியில் தற்போது கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதை அடுத்து, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதியுறுவதாகவும் தகவல்கள் வெளியாகும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

புது தில்லியில் சனிக்கிழமை நிலவரப்படி கரோனா பாதிப்பு 36 ஆயிரமாகவும், கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200 ஆகவும் உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மற்றும் சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என்று அமித் ஷாவின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.