/

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் மோடி

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

News image

piyush074538

Updated On :13 ஜூன் 2020, 7:28 am

புது தில்லி: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 
 
சுட்டுரையில் அவர் கூறிய வாழ்த்துச் செய்தியில், 

தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 

எனது ஆற்றல்மிக்க அமைச்சர் பியூஷ் கோயல். ரயில்வே வலையமைப்பை நவீனமயமாக்குவதில் முன்னணியில் உள்ளார். இந்தியாவில் வர்த்தகம் மற்றும் நிறுவனத்தை உயர்த்துவதிலும் அவர் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறார்.

அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள்களுக்கு ஆரோக்கியமாக வாழப் பிரார்த்தனை செய்கிறேன் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.