கரோனா சிகிச்சைக்காக 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள்: ரயில்வே தகவல்

கரோனா சிகிச்சைக்காக 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
ரயில் பெட்டிகள்
ரயில் பெட்டிகள்
Published on
Updated on
1 min read

புது தில்லி: கரோனா சிகிச்சைக்காக 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக   உள்வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட 204 ரயில் பெட்டிகள் 4 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் உத்தரபிரதேசத்திற்கு 70 பெட்டிகளும், தில்லிக்கு 54 பெட்டிகளும், தெலங்கானாவுக்கு 60 பெட்டிகளும் மற்றும் ஆந்திராவுக்கு 20 ரயில்பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com