கரோனா: கேரளத்தில் 75, கர்நாடகத்தில் 204 பேருக்கு தொற்று

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா: கேரளத்தில் 75, கர்நாடகத்தில் 204 பேருக்கு தொற்று
Published on
Updated on
1 min read


கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளம்:

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 75 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 53 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 19 பேர்.

இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,351 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,324 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் ஜூன் 16 மாலை 5 மணி முதல் ஜூன் 17 மாலை 5 மணி வரை புதிதாக 204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,734 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,804 பேர் குணமடைந்துள்ளனர். 2,824 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com