சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மாநிலங்களவைத் தேர்தல்: ஆந்திரத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார்

ஆந்திரத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நடைபெற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார். 

News image
Updated On :19 ஜூன் 2020, 9:55 am

ஆந்திரத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நடைபெற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார். 

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 36 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 19 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 8 மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது. 

Story image

இதில் ஆந்திரத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அமராவதியில் மாநில சட்டமன்றத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார். தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்து வருகின்றனர். 

அதேபோன்று ஆந்திரத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் சட்டமன்றத்துக்கு வந்து வாக்களித்தார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.