தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம்

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம்
Published on
Updated on
1 min read


புது தில்லி: தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

அவரது நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால், அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு (55) புதன்கிழமை இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதியானது. கடுமையான காய்ச்சலின் காரணமாக அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தில்லியில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்றைத் தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் கேஜரிவாலுடன் ஜெயின் கலந்து கொண்டிருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையொட்டி, தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முதல் பரிசோதனையில் கரோனா உறுதியாகவில்லை. தொடா்ந்து காய்ச்சல் இருந்ததால், 24 மணி நேரத்திற்கு பின்னா் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில் சத்யேந்தா் ஜெயினுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சத்யேந்தா் ஜெயினின் 88வயது மாமனாா் புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com