லடாக்கில் மரணமடைந்த ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு ரூ 5 கோடி நிதி: தெலங்கானா அரசு உத்தரவு

லடாக்கில் மரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ 5 கோடி நிதி வழங்குவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு
ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு
Published on
Updated on
1 min read

ஹைதராபாத்: லடாக்கில் மரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ 5 கோடி நிதி வழங்குவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக  ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உட்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களது குடும்பத்தாருக்கு மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் லடாக்கில் மரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ 5 கோடி நிதி வழங்குவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்திற்கு ஒரு வீடு, அவரது மனைவிக்கு குரூப்-1 அரசுப் பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரம் எல்லையில் வீரமரணமடைந்த மற்ற 19 வீரர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com