வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ராஜஸ்தானில் இளைஞரும், சகோதரரின் விதவை மனைவியும் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் இளைஞரும், அவரது சகோதரரின் விதவை மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

News image
சேர்ந்து வாழ முடியாததால் இருவர் தற்கொலை
Updated On :22 ஜூன் 2020, 10:34 am

PTI


ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் இளைஞரும், அவரது சகோதரரின் விதவை மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஹர்கேஷ் (22), அவரது சகோதரர் மனைவி கன்னா (25) இருவரும் நேற்று இரவு அவர்களது வீட்டில் தனித்தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இளைஞரும், சகோதரரின் விதவை மனைவியும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

கன்னா, சில ஆண்டுகளுக்கு முன்பு ஹர்கேஷின் சகோதரரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், ஹர்கேஷின் சகோதரர் மரணம் அடைந்து விட்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், கன்னாவும், ஹர்கேஷும் சேர்ந்து வாழ விரும்பினர். ஆனால், அதற்கு குடும்பத்தார் ஒப்புக் கொள்ளவில்லை.

இதனால் இருவரும் இந்த துயர முடிவை எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.