ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நாட்டில் குணமடைவோர் விகிதம் 57.43%: மத்திய அரசு

நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 57.43% ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 57.43% ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. (கோப்புப்படம்)
Updated On :25 ஜூன் 2020, 10:46 am

DIN


நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 57.43% ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

"நாடு முழுவதும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு ஆய்வகங்கள் 734 மற்றும் தனியார் ஆய்வகங்கள் 273 என மொத்தம் 1,007 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் 13,012 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,71,696 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 57.43% ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,86,514 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் சராசரியாக 33.39 பேர் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதன் உலகளவிலான சராசரி 120.21 ஆக உள்ளது. இதேபோல் ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் கரோனா தொற்றால் பலியாவோர் விகிதமும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் சராசரியாக 1.06 பேர் பலியாகின்றனர். இதன் உலகளவிலான சராசரி 6.24.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தலைமையிலான மத்தியக் குழு ஜூன் 26 முதல் ஜூன் 29 வரை குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானாவுக்குச் செல்கிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்க மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஒருங்கிணைந்து செயல்படவுள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.