பிகாரில் இடி, மின்னலுக்கு இன்று (வியாழக்கிழமை) 83 பேர் பலியாகியிருப்பதாக அந்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கோபால்கன்ஜ் மாவட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், பிகாரில் இடி விழுந்ததில் பலியான 83 பேரது குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.