சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பொது முடக்கம் நீட்டிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2020, 4:29 pm

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் உள்ள 5ஆம் கட்ட பொது முடக்கம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனினும், கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் ஜூன் 30க்குப் பிறகும் நாடு முழுவதும் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்கிற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பொது முடக்க காலத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து, அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை அறிவித்திருந்தார். 

தற்போது மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.