இந்திய, சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இருநாட்டு ராணுவத் தளபதிகள் நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) 3-ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
"இந்தியா, சீனா ராணுவத் தளபதிகள் நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு 3-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த 2 முறை சீனாவின் மோல்டோவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த முறை இந்தியாவில் சுஷூல் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எல்லையில் மோதல் போக்கைத் தவிர்க்க இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வது பிரதான நோக்கமாக இருக்கும்.
பதற்றமான சூழலைத் தணிப்பதற்காக, விவாதத்துக்குரிய அனைத்துப் பகுதிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது."
முன்னதாக, இருநாட்டு ராணுவத் தளபதிகள் நிலையில் ஜூன் 6 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜூன் 22-ஆம் தேதி சுமார் 11 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் ராணுவப் படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்கக் கோரிக்கை

சங்ககிரியில் சித்திரை தோ்த் திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பினாா் சுவாமி

வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

இந்திய யு20 தடகள அணியில் சாதனா ரவி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

