இந்தியா
தில்லியில் ஒரு சில நாள்களில் பிளாஸ்மா வங்கி: கேஜரிவால்
புது தில்லியில் இன்னும் ஒரு சில நாள்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: புது தில்லியில் இன்னும் ஒரு சில நாள்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜரிவால், கரோனா பாதித்து குணமடைந்தவர்கள், பிளாஸ்மா தானம் அளிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கும் கேஜரிவால், கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, தில்லியில் பிளாஸ்மா வங்கியை உருவாக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மையம், பிளாஸ்மா வங்கியை அமைக்கிறது. இங்கு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் யாருக்கு வேண்டுமானாலும் பிளாஸ்மா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.