ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வெறுப்பைக் கைவிடுங்கள், சமூக ஊடகங்களை அல்ல: மோடிக்கு ராகுல் அறிவுரை

சமூக ஊடகங்களுக்குப் பதிலாக வெறுப்பைக் கைவிடுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2020, 4:32 pm

DIN


சமூக ஊடகங்களுக்குப் பதிலாக வெறுப்பைக் கைவிடுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்பு சுட்டுரைப் பக்கத்தில் ஒரு பதிவை பதிவேற்றம் செய்திருந்தார். அதில், "இந்த ஞாயிறன்று எனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் மற்றும் யூ ட்யூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகக் கணக்குகளில் இருந்தும் வெளியேறலாமா என்று சிந்தித்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய சுட்டுரைப் பதிவில் குறிப்பிடுகையில், "கைவிட வேண்டியது சமூக ஊடகங்களின் கணக்குகளை அல்ல, வெறுப்பை" என்றார்.

தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறைக்கு பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சு மிக முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு வெறுப்பைக் கைவிடுங்கள் என மோடிக்கு அறிவுரை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.