புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரியாத்தில் இருந்து திரும்பிய இரு பயணிகளிடம் ஆயிரம் கிராம் தங்கம் பறிமுதல்

ரியாத்தில் இருந்து திரும்பிய இரு பயணிகளிடம் இருந்து தில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் ஆயிரம் கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :13 மார்ச் 2020, 3:55 am

DIN

ரியாத்தில் இருந்து திரும்பிய இரு பயணிகளிடம் இருந்து தில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் ஆயிரம் கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ரியாத்தில் இருந்து தில்லிக்கு வியாழக்கிழமை வந்தடைந்த 6இ-1838 விமானத்தில் இருந்து வெளியேறிய இரு இந்தியப் பயணிகளை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் இருந்து சுமார் ரூ.44 லட்சம் மதிப்புடைய 1050 கிராம் எடையுள்ள 9 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தில்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.