காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

விடைத்தாள் திருத்தம் பணிக்கு 3,000 சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு: ரமேஷ் போக்ரியால்

​சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தம் பணிக்காக நாடு முழுவதும் 3,000 சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 மே 2020, 2:42 pm


சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தம் பணிக்காக நாடு முழுவதும் 3,000 சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவிக்கையில்,

"விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3,000 சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களிலிருந்து 1.5 கோடிக்கும் மேலான விடைத்தாள்கள் திருத்தம் செய்வதற்காக ஆசிரியர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும். இந்தப் பணி சுமார் 50 நாள்களில் நிறைவடையும்" என்றார். 

முன்னதாக வெள்ளிக்கிழமை 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான நிலுவையில் இருக்கும் பொதுத்தேர்வு பற்றி பேசிய அவர், "சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று மாணவர்கள் கவலையில் உள்ளனர். நடைபெறாத தேர்வுகள் ஜூலை 1 மற்றும் ஜூலை 15-க்கு மத்தியில் நடத்தப்படும். ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகள், மீண்டும் நடத்தப்படாது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.