டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆந்திரத்தில் எல்.ஜி.பாலிமர் தொழிற்சாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

எல்.ஜி.பாலிமர் தொழிற்சாலையை அகற்றக்கோரி இறந்தவர்களின் சடலங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:37 pm

DIN


எல்.ஜி.பாலிமர் தொழிற்சாலையை அகற்றக்கோரி இறந்தவர்களின் சடலங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள எல்.ஜி. பாலிமா்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஸ்டைரீன் நச்சுவாயு கசிவால் 12 போ் உயிரிழந்தனா். நச்சுவாயுவால் 1,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச்சம்பத்தில் 32 விலங்குகளும் பலியாகின. 199 விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் எல்.ஜி.பாலிமர் தொழிற்சாலையை அகற்றக்கோரி அதன் முன்பாக இறந்தவர்களின் சடலங்களுடன் பொதுமக்கள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 5 மணிநேரத்துக்கு மேலாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

Story image

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் சடலங்களை மீட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தொழிற்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.