பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆந்திர மாநிலத்தையும் விட்டு வைக்காத கோயம்பேடு சந்தை

ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக குறைந்த பாதிப்பானது கடந்த செவ்வாயன்று பதிவானது. அன்று 33 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் அங்கு 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 மே 2020, 9:00 am

PTI


அமராவதி: ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக குறைந்த பாதிப்பானது கடந்த செவ்வாயன்று பதிவானது. அன்று 33 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் அங்கு 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புதன்கிழமை காலை 10 மணியோடு முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், இவர்களில் 7 பேர் சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்குச் சென்று வந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டூரில் மட்டும் 12 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சித்தூரில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்களில் 3 பேர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குச் சென்று வந்தவர்களாக இருக்கிறார்கள். இதேபோல கிழக்கு கோதாவரியில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆந்திரத்தில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,137 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 948 ஆகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய கரோனா அபாயப் பகுதியாக மாறிய கோயம்பேடு சந்தை மூலமாக ஆந்திர மாநிலத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.