ரயில்கள் மூலம் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர் : ரயில்வே
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இந்திய ரயில்வே இயக்கிய ரயில்கள் மூலம் இதுவரை சுமார் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


புது தில்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இந்திய ரயில்வே இயக்கிய ரயில்கள் மூலம் இதுவரை சுமார் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தங்கள் மாநில தொழிலாளர்களை சொந்த ஊர் கொண்டு வர உதவுமாறு பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.
இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மே 1-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மே 1-ம் தேதி முதல் இதுவரை இயக்கப்பட்ட 800 ரயில்கள் மூலம் சுமார் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியிருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...