எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தலைநகர் தில்லியில் ஒரு மாதத்தில் 4ஆவது முறையாக நிலநடுக்கம்

தலைநகர் தில்லியில் இன்றும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

News image
earthquake
Updated On :15 மே 2020, 10:41 am

DIN

தலைநகர் தில்லியில் ஒரு மாதத்தில் 4ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

தலைநகர் தில்லியில் இன்று காலை 11.28 மணியளவில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 2.2ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியின் வடமேற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தில்லியில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்படும் 4ஆவது நிலநடுக்கம் இதுவாகும்.

ஏற்கெனவே தலைநகர் தில்லியில் ஏப்ரல் 12, 13 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.