மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனது கையால் சமைத்து உணவளித்த ஆந்திர பெண் காவல் அதிகாரி

ஆந்திர மாநிலத்தில் குடியேறியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில், எலுமிச்சை சாதம் செய்துகொடுத்து அசத்தியுள்ளார் விழியநகரம் பெண் காவல் கண்காணிப்பாளர் பி.ராஜா குமாரி.

News image
Updated On :21 மே 2020, 7:31 am


ஆந்திர மாநிலத்தில் குடியேறியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில், எலுமிச்சை சாதம் செய்துகொடுத்து அசத்தியுள்ளார் விழியநகரம் பெண் காவல் கண்காணிப்பாளர் பி.ராஜா குமாரி.

கடந்த 16-ம் தேதி புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களிடமிருந்து காவலர் குமாரிக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்கள் நெல்லூரில் இருந்து இரண்டு நாள்களாக உணவு இல்லாமல் நடந்து வருவதாகவும், விழியநகரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தற்போது தங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இரவில் பெண் அதிகாரியால் உணவைச் சேகரிக்க முடியவில்லை என்பதால், தன் வீட்டிற்குச் சென்று எலுமிச்சை சாதம் தயார் செய்துள்ளார். அவர்கள் இருக்கும் இடத்தை பெண் காவல் அதிகாரி தேடியுள்ளார். ஆனால், அவர்கள் உள்ளூர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தகவல் தெரிந்தது. 

இதையடுத்து, காவல் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு உணவளித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரோ ஒருவர் அவர்களுக்கு எஸ்.பி.யின் தொலைபேசி எண்ணைக் கொடுத்ததாகவும், ஏதேனும் தேவைப்பட்டால் அவரை அழைக்குமாறு பரிந்துரைத்ததாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.