தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

உ.பி.யில் கரோனாவில் இருந்து மீண்ட இளைஞர் பிளாஸ்மா தானம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனாவில் இருந்து மீண்ட 21 வயது இளைஞர் தனது பிஸ்மாவை தானமாக அளித்துள்ளதாக கே.ஜி.எம்.யூ மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :23 மே 2020, 6:36 pm IST

லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனாவில் இருந்து மீண்ட 21 வயது இளைஞர் தனது பிஸ்மாவை தானமாக அளித்துள்ளதாக கே.ஜி.எம்.யூ மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

கரோனா தீநுண்மி தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்ற திரவத்தை எடுத்து, சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளியின் உடலில் செலுத்தப்படும். இதன் மூலம் பிளாஸ்மா செலுத்தப்பட்ட நோயாளிக்கு எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய முடியும். ஏற்கெனவே பல மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லக்னௌவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, பிளாஸ்மா தானம் பெறுவது தொடங்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த யஷ் தாக்கூர் என்ற இளைஞர்,வெள்ளிக்கிழமை இரவு தனது பிளாஸ்மாவை தானமாக வழங்கியுள்ளார். 

அந்த மருத்துவமனையில் கரோனாவால் குணமடைந்த ஏழு பேர் தங்களது பிளாஸ்மாவை தானமாக அளித்துள்ளனர். அதை பிளாஸ்மா வங்கியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஒரு வருடத்திற்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதைப் பயன்படுத்தி சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 27 அன்று, ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது பெண் முதல் நபராகத் தனது பிளாஸ்மாவை கே.ஜி.எம்.யூ மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியுள்ளார். இவர் கனடாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஆவார். கரோனாவில் இருந்த மீண்ட அவர் மாரடைப்பால் மே 9 அன்று காலமானார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 5,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,332 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,335 பேர் நோயிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். இந்நோய்க்கு மொத்தம் 152 பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.