பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க மாட்டார் என லோக் ஜன்சக்தியின் தலைவர் சிராங் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தின் பேரவைத் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2ஆம் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் ககரியா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நிதிஷ் குமார் பிகாரின் முதல்வராகப் போவதில்லை. மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள்.” என்றார்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லோக் ஜன்சக்தி கட்சி பிகார் பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.