தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

‘சில நாடுகளில் இந்தியர்கள் நுழைய கட்டுப்பாடுகள் தொடர்கின்றன’ - மத்திய அமைச்சர்

சில நாடுகள் இன்னும் இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவில்லை, அவர்கள் அனுமதித்தால் பயணிகளை கொண்டு செல்ல தயாராக உள்ளோம் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

News image
ஹர்தீப் சிங் புரி
Updated On :3 நவம்பர் 2020, 10:16 am

PTI

புதுடெல்லி: சில நாடுகள் இன்னும் இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவில்லை, அவர்கள் அனுமதித்தால் பயணிகளை கொண்டு செல்ல தயாராக உள்ளோம் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து ஹர்தீப் சிங் வெளியிட்ட சுட்டுரையில்,

“மே மாதம் 6ஆம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றோம்.

இருப்பினும், கரோனா தொற்று காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் இந்திய நாட்டினர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை இன்னும் நீக்கவில்லை.

அக்டோபர் 22 ம் தேதி, கேரளம் மற்றும் பஹ்ரைன் இடையே இயங்கும் சிறப்பு விமானங்களின் சராசரி கட்டணம் ரூ .30 ஆயிரம் முதல் ரூ.39 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வளைகுடா நாடுகள், வாரத்திற்கு 750 பயணிகளை மட்டுமே இந்தியாவில் இருந்து வர அனுமதிக்கிறது.

இந்த நாடுகளுக்கு பயணிகள் வர கட்டுப்பாடுகளை எளிதாக்கினால் அதிக பயணிகளுடன் பறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

கரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஜூலை முதல் வெளிநாடுகளுக்கு இயங்கி வருகின்றன.

கரோனா வைரஸ் தொற்றுநோயால் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மே 25 அன்று இந்தியா தனது உள்நாட்டு பயணிகள் விமானங்களைத் இயக்கத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.