மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இமாசல்-தில்லி: 8 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடக்கம்

இமாசலில் இருந்து தில்லிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை 8 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமையான இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

News image
இமாசலில் இருந்து தில்லிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை 8 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது (கோப்புப்படம்)
Updated On :5 நவம்பர் 2020, 10:36 am

DIN

இமாசலில் இருந்து தில்லிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை 8 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமையான இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பேருந்து சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

எனினும் தொற்று பரவல் விகிதம் குறைந்து வருவதற்கேற்ப மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி தொற்று பரவல் குறைவாக உள்ள மாநிலங்கள் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கியுள்ளன.

அந்தவகையில் இமாசலிலும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. கரோனா பரவும் விகிதத்திற்கேற்ப பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.  தில்லியில் தொற்று பரவும் விகிதம் அதிகமாக இருந்ததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை தற்போது 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இமாசலில் இருந்து தில்லிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய பயணி ஒருவர், ''கரோனா பரவலால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். தனியார் பேருந்துகளும் அதிக அளவில் கட்டணங்களை வசூலித்துவந்தன. இதனிடையே தற்போது தில்லிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.

இது குறித்து பேசிய ஓட்டுநர் ஜியா லால், ''கரோனா பரவலுக்கு இடையே பேருந்துகளை இயக்குவது அச்சமளிக்கிறது. எனினும் பேருந்தை இயக்குவது எங்களது கடைமை. அதனை நாங்கள் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.