கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் 'கவுன்ட் டவுன்' தொடங்கியது

நவம்பர் 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட்டின் 26 மணி நேர 'கவுன்ட் டவுன்'  வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட்
Updated On :6 நவம்பர் 2020, 1:01 pm

DIN

நவம்பர் 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட்டின் 26 மணி நேர 'கவுன்ட் டவுன்'  வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் புதிய ராக்கெட்டுகள் எதுவும் விண்ணில் ஏவப்படவில்லை.

இந்நிலையில் 51ஆவது பி எஸ் எல் வி ராக்கெட்டான பிஎஸ் எல்வி சி 49 ராக்கெட் நாளை (நவம்பர் 7ஆம் தேதி) ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-01 மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான 26 மணி நேரக் 'கவுன்ட் டவுன்' இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் படங்களை எடுக்கும் தொழில்நுட்பம் கொண்ட சின்தடிக் அபர்சர் ரேடார் இணைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.