மணிப்பூரில் காலியாக உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றுவரும் இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 64.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மணிப்பூரில் முதல்வர் நோங்தோம்பம் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதனிடையே மணிப்பூர் காங்கிரஸ் கட்சியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்ததால், அவர்கள் வெற்றி பெற்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த நான்கு தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் காலை 11 மணி நிலவரப்படி 19.14 சதவிகித வாக்குகள் பதிவாகிய நிலையில், பின்னர் வாக்குப்பதிவு வேகமாக நடைபெற்றது.
மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி 64.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


