தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நோய் கட்டுப்பாட்டில், சரியான உணவு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

நோய் கட்டுபாட்டில், சரியான உணவு முறை முக்கிய பங்குவகிக்கிறது என்று மத்திய அமைச்சரும், நீரிழிவு நோய் நிபுணருமான ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 5:22 pm

DIN

நோய் கட்டுப்பாட்டில், சரியான உணவு முறை முக்கிய பங்குவகிக்கிறது என்று மத்திய அமைச்சரும், நீரிழிவு நோய் நிபுணருமான ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
உலக நீரிழிவு வாரத்தை முன்னிட்டு, ‘டிஜிட்டல் வழி அறிவு மேம்பாடு - நிரிழிவு நோய்க்கு ஏற்ற ஊட்டசத்து’’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்குக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. 
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், துவக்கவுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், நம்நாட்டின் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தார். அவர் ஆயுஷ் அமைச்சகத்தை உருவாக்கினார். ஐக்கிய நாடுகள் சபை வாயிலாக சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்கச் செய்தவர் நரேந்திர மோடிதான்.
புதிய விதிமுறைகளுடன் வாழ கரோனா நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. சமீப ஆண்டுகளில் முக்கியத்துவம் இழந்திருந்த சுகாதாரமாக இருத்தல் உட்பட மருந்தியல் அல்லாத மேலாண்மை முறைகளை மருத்துவர்கள் இப்போது வலியுறுத்துவதற்கு கரோனா வழிவகுத்துள்ளது. 
கரோனா தொற்று முடிந்த பின்பும், சமூக இடைவெளி ஒழுங்கு, சுற்றுப்புற அசுத்தத்தை தவிர்ப்பது போன்ற பழக்கவழக்கங்களை நாம் கடைபிடிப்பது பலவித தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
நெருக்கடியிலும், புதிய விதிமுறைகளை கண்டறிய கொவிட் நம்மை தூண்டியதுடன், இந்திய பாரம்பரிய மருத்துவ முறையின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியுள்ளது. நோய்கட்டுப்பாட்டில் சரியான உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. 
நீரிழிவு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் முறையான உணவு முறை ஆரோக்கியமான மக்களுக்கும் பரிந்துரைக்கப்படலாம். அப்போதுதான் அவர்களுக்கும் நோய் தாக்குதல் ஏற்படாது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.