நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பிகாரில் மகா கூட்டணிதான் ஆட்சியமைக்கும்: ஆர்ஜேடி நம்பிக்கை

பிகாரில் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும்நிலையில் மகா கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

News image
தேஜஸ்வி யாதவ்
Updated On :10 நவம்பர் 2020, 1:03 pm

DIN

பிகாரில் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும்நிலையில் மகா கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

243 பேரவைத் தொகுதிகள் கொண்ட பிகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய சூழல் வரையில் 42% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் தனது சுட்டுரைப் பதிவில், “மகா கூட்டணிதான் பிகாரில் ஆட்சியமைக்கும்.” என தெரிவித்துள்ளது.

மேலும் அந்தப் பதிவில், “களத்தில் இருந்து வரும் தகவல்களின்படி பல்வேறு தொகுதிகள் நமது கட்சிக்குத் தான் சாதகமாக உள்ளன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட்டிருந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிகாரில் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி 132 தொகுதிகளிலும், மகா கூட்டணி 99 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.