ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

’தனிமனித ராணுவமாக செயல்பட்டுள்ளீர்கள்’: தேஜஸ்விக்கு மெகபூபா முப்தி வாழ்த்து

பிகார் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதாக ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவிற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
Updated On :11 நவம்பர் 2020, 3:59 pm

DIN

பிகார் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதாக ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவிற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில்,  “வாழ்த்துக்கள் தேஜஸ்வி. பிளவுபடுத்தும் அரசியலுக்கு மாறாக பிகார் தேர்தலில் மக்களின் உண்மையான பிரச்னைகளை பேசி வாக்கு சேகரித்துள்ளீர்கள். தனிமனித ராணுவமாக இருந்தபோதும் நீங்கள் கடுமையாக சண்டையிட்டீர்கள்.” என முப்தி தெரிவித்துள்ளார்.

பிகாரில் நேற்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.