சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,496 கரோனா; 122 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :12 நவம்பர் 2020, 3:01 pm

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,36,329 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 7,809 பேர குணமடைந்துள்ளனர். 

இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,05,064 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், கரோனாவுக்கு இன்று 122 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 45,682 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 84,627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.