ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தெலங்கானாவில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தெலங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.

News image
தெலங்கானாவில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
Updated On :13 நவம்பர் 2020, 10:28 am

DIN


புது தில்லி: தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தெலங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.

தெலங்கானா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பட்டாசு விற்பனையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து பிறப்பித்த உயர் நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்து, தீபாவளியன்று பசுமைப் பட்டாசுகளை இரண்டு மணி நேரம் மட்டும் வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கத் தடைக்கோரி வழக்கறிஞர் இந்திரா பிரகாஷ் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், மாநிலத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்து உத்தரவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.