திருப்பதி: திருமலையில் கடந்த இரு தினங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.
திருமலை மற்றும் திருப்பதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையால், திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் முதல் மலைச்சாலையின் 53 மற்றும் 54-ஆவது வளைவு அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மண்சரிவு ஏற்பட்டதுடன், பாறைகள் சாலைகளில் உருண்டன. எனினும், நள்ளிரவு வேளை என்பதால் அச்சமயத்தில் சாலையில் வாகனங்கள் செல்லவில்லை.
தகவல் அறிந்த தேவஸ்தான ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு, சாலையில் கிடந்த பாறைகளை அகற்றி போக்குவரத்துக்கு சாலையைத் தயாா்படுத்தினா். இதனால் திங்கள்கிழமை அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மலைச்சாலையில் பாறைகள் வலுவற்று உருளும் நிலையில் உள்ள பகுதிகளில் இரும்புக் கம்பிகளை தடுப்புகளாக அமைக்குமாறு தேவஸ்தான அதிகாரிகள் ஊழியா்களுக்கு உத்தரவிட்டுள்ளனா். மழைக்காலம் என்பதால், வாகன ஓட்டிகள் மலைச்சாலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


