ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

உ.பி.யில் சாலை விபத்து: 3 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் அடையாளம் தெரியாத வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

News image

3 killed in road accident in UP's Amethi 

Updated On :19 நவம்பர் 2020, 6:32 am

PTI

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் அடையாளம் தெரியாத வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இங்குள்ள ஜெய்ஸ் காவல் நிலைய பகுதியில் உள்ள லோஹியா பாலம் அருகே புதன்கிழமை மாலை இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

இருசக்கரவாகனத்தில் சென்ற மூன்று பேர் - பைத்யநாத் சரோஜ் (60), ராஜேஷ் சரோஜ் (19), நீரஜ் சுக்லா (20) ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்து புர்சத்கஞ்சில் உள்ள சமூக சுகாதார மையத்திற்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சுகாதார மையத்திற்குக் கொண்டுவந்தபோது அவர்கள் மூவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.