சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இந்தூரில் நகைக்கடை ஷோரூமில் 31 பணியாளர்களுக்கு கரோனா

இந்தூரில் நகைக்கடை ஷோரூம் ஒன்றில் 31 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :19 நவம்பர் 2020, 2:54 pm

இந்தூரில் நகைக்கடை ஷோரூம் ஒன்றில் 31 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) அஜய் தேவ் சர்மா கூறுகையில், இந்தூரில் நகைக்கடை ஷோரூமில் பணியாற்றிய 31 பணியாளர்களில் 20 பணியாளர்களுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 11 பணியாளர்களுக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது. 

தகவல் கிடைத்தவுடன் ஷோரூம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஷோரூமிற்கு சென்று கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா். சமீபத்திய நாளாக ஷோரூமிற்கு வருமைபுரிந்த வாடிக்கையாளர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி ஷோரூம் 7 நாள்கள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.