ரேவரி: கரோனா பொதுமுடக்கத்துக்குப் பின், ஹரியாணாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 83 மாணவ, மாணவிகளுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதா என்று ஆய்வு செய்யுமாறு மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று ஜிந்த் மாவட்டத்தில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. ரேவாரி மாவட்டத்தில் உள்ள 12 அரசுப் பள்ளிகளில் 72 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்று என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் காலமானதால், பள்ளி மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 12 பள்ளிகளின் மாணவர்களுக்கு சோதனை செய்ததில் 72 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ரேவரி மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


