மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையொட்டி காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
மத்திய அமைச்சராக இருந்த லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி காலமானார். இந்நிலையில் காலியான ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன்படி கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.