டிச.14-இல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் அறிவிப்பு

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையொட்டி காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
ராம்விலாஸ் பாஸ்வான்
ராம்விலாஸ் பாஸ்வான்
Updated on
1 min read

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையொட்டி காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

மத்திய அமைச்சராக இருந்த லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி காலமானார். இந்நிலையில் காலியான ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதன்படி கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com