புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா மொத்த பாதிப்பில் இது 5 சதவீதமாகும்.
தொடர்ந்து 47-வது நாளாக புதிதாக நோயிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை, புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போது நாட்டில் 4,43,303 பேர் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.95 சதவீதமாகும்.
நோயிலிருந்து குணமடைந்தோர் வீதம் இன்று 93.58 சதவீதமாக பதிவாகியுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 83,83,602 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோருக்கும், பாதிக்கப்பட்டோருக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 79,40,299 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 79.49 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


