சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தாராவியில் புதிதாக 3 பேருக்கு கரோனா

தாராவியில் புதிதாக இன்று 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

தாராவி.

Updated On :19 நவம்பர் 2020, 2:03 pm

தாராவியில் புதிதாக இன்று 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவி. இங்கு ஆரம்பத்தில் கரோனா வேகமாக பரவி வந்தது. பின்னர் மாநில அரசின் தீவிர நடவடிக்கையால் வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், சமீப நாள்களாக தாராவியில் கரோனா மீண்டும் பரவி வருகிறது. 

இன்று மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,629 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், அவர்களில் 3,307 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 

தற்போதைய நிலவரப்படி 11 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2.5 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட தாராவியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.