ஹிமாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தோரங் கிராமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 52 வயதான பூஷண் தாகூர் என்பவருக்கு மட்டும் கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, இந்த கிராமத்தில் ஒரு மத வழிபாட்டு விழா நடைபெற்றுள்ளது. அப்போது கூட்டம் கூடியதால்தான், ஒரு கிராமம் முழுக்க கரோனா தொற்று பரவியதாகக் கூறப்படுகிறது.
இந்த கிராமத்தில் வசித்து வந்த 42 பேரும், தாங்களாக முன் வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டதில், 42 பேரில் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில்லை என்று தெரிய வந்த அந்த நபர் இது பற்றி கூறுகையில், நான் எப்போதும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, கையை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கழுவி வந்தேன். முகக்கவசம் அணிந்தே இருந்தேன் என்று கூறுகிறார். மேலும், கரோனாவை மக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த மதவழிபாட்டு விழாவில் பங்கேற்ற அக்கம் பக்கத்து கிராம மக்களும், தங்களுக்கும் கரோனா தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


