ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

அடுத்தாண்டு 3 புதிய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த ஒடிசா அரசுத் திட்டம் 

ஒடிசாவில் அடுத்தாண்டு புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 

News image

Odisha govt plans admission in three new medical colleges next year

Updated On :20 நவம்பர் 2020, 7:04 am

PTI

ஒடிசாவில் அடுத்தாண்டு புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 

புதிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் கட்டடத்தை இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்கவும், அடுத்த கல்வியமர்வில் இருந்து சேர்க்கை தொடங்கத் தேவையான அனுமதியை மருத்துவ கவுன்சிலுக்கு நகர்த்தவும் அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மூன்று திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்யும் போது தலைமைச் செயலர் ஏ.கே.திரிபாதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தல்ச்சர், சுந்தர்கர் மற்றும் பூரி ஆகிய மூன்று இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானத்தை தற்போது அரசு மேற்கொண்டுள்ளது.

மகாநதி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - தல்ச்சர், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - சுந்தர்கர் மற்றும் ஜெகந்நாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பூரி ஆகிய கல்லூரிகளில் தலா 100 இடங்களைக் கொண்ட எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்களைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.