நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உ.பி.யில் 80 பசுக்கள் மர்மமான முறையில் இறப்பு: விசாரணைத் தொடக்கம்

ராஜஸ்தானில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 80 பசுக்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

News image

உ.பி.யில் 80 பசுக்கள் மர்மமான முறையில் இறப்பு (கோப்புப்படம்)

Updated On :22 நவம்பர் 2020, 7:40 am

DIN

ராஜஸ்தானில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 80 பசுக்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள பில்யூபாஸ் கிராமத்தில் மர்மமான முறையில் 80 பசுக்கள் நேற்று (சனிக்கிழமை) இறந்தன.

தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுக்கள் மர்மான முறையில் இறந்தது குறித்து  கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் நேரில் வந்து பார்வையிட்ட வட்டாட்சியர், பசுக்கள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது. நோய் மூலம் பசுக்கள் இறந்தனவா? அல்லது உணவுப் பிரச்னை காரணமா என்ற கோணத்தில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது. பசுக்களுக்கு வைக்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.