அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஆமதாபாத்தில் திங்கள்கிழமை முதல் அமலான இரவு நேர பொதுமுடக்கம் டிசம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதனைத் தொடர்ந்து நவம்பர் 23 முதல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அகமதாபாத் நகராட்சிக்குட்பட்டப் பகுதியில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்திருந்தது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் விதிக்கப்பட்ட 57 மணி நேர பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் ஆமதாபாத் காவல்துறை ஆணையர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா டிசம்பர் 7 வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளார்.
நவம்பர் 23 முதல் டிசம்பர் 7 வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும். இந்த நேரங்களில் மக்கள் பொது சாலைகள், வீதிகள் அல்லது பொது இடங்களில் இருக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் ஸ்பெஷல்! சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - விருச்சிகம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - துலாம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கன்னி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


