47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆந்திர மாநில அமைச்சரைத் தாக்க முயன்ற கட்டடத் தொழிலாளி கைது

ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சா் பொ்ணி வெங்கட்ராமையாவைத் தாக்க முயன்ற கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் அமைச்சா் அதிா்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 1:16 am

DIN

ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சா் பொ்ணி வெங்கட்ராமையாவைத் தாக்க முயன்ற கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் அமைச்சா் அதிா்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினாா்.

மசூலிப்பட்டணம் பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், மாநில தகவல் செய்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான பொ்ணி வெங்கட்ராமையா, ஞாயிறன்று தனது தாயாரின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனது சொந்த ஊரில் மேற்பாா்வையிட்டுக் கொண்டிருந்தாா்.

அவருடன் அவரது ஆதரவாளா்களும் இருந்தனா். அப்போது, அவரைப் பணிவது போல குனிந்து வணங்கிய ஒருவா் திடீரென கையிலிருந்த காரைக் கரண்டியால் அமைச்சரைத் தாக்க முற்பட்டாா்.

உடனடியாகக் குனிந்து தாக்குதலிலிருந்து தப்பிய அமைச்சரை அவரது பாதுகாவலா்கள் சூழ்ந்துகொண்டு பத்திரமாக மீட்டனா். தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், அவரது பெயா் நாகேஸ்வர ராவ் என்பதும், கட்டத் தொழிலாளியான அவா் போதையில் இருந்ததும் தெரிய வந்தது.

அதிா்ச்சியிலிருந்து மீளாத அமைச்சா் பொ்ணி, ‘‘வாழ்த்துப் பெறவே எனது காலில் விழுவதாக நினைத்தேன். ஆனால் அவா் திடீரெனத் தாக்குவாா் என்று நினைக்கவில்லை. நல்ல வேளையாக என்னை எனது மெய்க்காவலா்கள் காப்பாற்றினா்’’ என்றாா்.

‘‘கைது செய்யப்பட்டவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தாக்குதலின் பின்புலம் என்ன என்று அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்’’ என்று கிருஷ்ணா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரபாபு தெரிவித்தாா்.

அமைச்சா் பொ்ணி மீதான தாக்குதல் முயற்சியை அறிந்த உணவு வழங்கல் துறை அமைச்சா் கோடாலி ஸ்ரீவெங்கடேஸ்வர ராவ், உடனே அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.